செய்திகள்

திருவள்ளூர்: திருத்தணி மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி

Published On 2017-10-21 07:54 GMT   |   Update On 2017-10-21 07:54 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலைப்பாதையில் சுற்றுலா வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலை சுற்றிப்பார்க்க மதுரையில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர். 

அந்த பேருந்து திருத்தணி மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் அந்த ஆட்டோவின் ஓட்டுநர் குமார் உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பேருந்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த திருத்தணி கோட்டாட்சியர் ஜெயராமன், மீட்புப்பணிகளை பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News