செய்திகள்
நெல்லை அருகே வயதான காலத்தில் யாரும் கவனிக்காததால் கல்வெட்டான் குழியில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தாதனூத்து 2- வது தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது70). டெய்லரான இவர் தற்போது வயதாகிவிட்டதால் வேலையின்றி வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அப்பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டான் குழியில் நீரில் மூழ்கி தினகரன் இறந்து கிடப்பதாக தாழையூத்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினகரனுக்கு 3 மகன்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. வயதான காலத்தில் யாரும் கவனிக்காததால் தினகரன் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.