செய்திகள்

குடவாசல் அருகே பெண் தற்கொலை

Published On 2017-10-17 13:17 GMT   |   Update On 2017-10-17 13:18 GMT
குடவாசல் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலத்தை சேர்ந்த கணேசன் மனைவி மாலதி (வயது 55). இவர் தனது மகள்களுக்கு திருமண சீர்வரிசை செய்ய பணம் இல்லாததால் மனவேதனை அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News