செய்திகள்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு - மழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகரும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாமரை பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகரும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாமரை பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.