செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததை கண்டித்து தஞ்சையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததை கண்டித்து தஞ்சை மாநகர காங்கிரஸ் சார்பில் இன்று தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சதாசிவம் தலைமை தாங்கினார். துணை தலைவர் லட்சுமி நாராயணன், பட்டதாரி அணி துணை தலைவர் வாசு, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரேவதி சக்கிலோ, கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜேம்ஸ், ராஜூ, ராஜகோபால், பீஸ்மா ரவி, வேங்கை கணேசன், முருகேசன், சந்திரசேகரன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.