செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு முதியவர் பலி
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே வளத்தூர், மேல் வளத்தூர் இடையே உள்ள தண்டவாளத்தில் 70 வயது மதிக்கதக்க ஆண் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது தெரியவில்லை. நீலநிற சட்டை, மஞ்சள் நிற பேண்டும் அணிந்து இருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.