செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் கே.என். நேரு திடீர் ஆய்வு

Published On 2017-09-28 10:19 GMT   |   Update On 2017-09-28 10:19 GMT
திருச்சி அரசு மருத்துவ மனையில் தி.மு.க செயலாளர் கே.என் நேரு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட வார்டில் திடீரென ஆய்வு செய்தார்.

திருச்சி:

திருச்சி அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் பாதித்த 144 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டின் அனிதா தகவல் தெரிவித்தார். இந் நிலையில் திருச்சி அரசு மருத்து வமனையில் திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளர் கே.என் நேரு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட வார்டில் ஆய்வு செய்தார்.

டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் இருக்கும் தனி தனி வார்டுகளுக்கு சென்று டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்தார். உரிய சிகிச்சை அளிக்க வேண்டி டாக்டர்களிடம் வலியுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் கிராம பகுதிகளில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவுப் படி அனைத்து மாவட்ட செயலாளர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவ மனைகளில் ஆய்வு செய்து வருகிறோம்.

டெங்கு காய்சலில் பாதிக்கப் பட்டவிவரங்கள் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தமிழக அரசு அதனை மறைக்க முயற்சி செய்கிறது. வருங்காலத்தில் மேலும் டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News