செய்திகள்

மேலூர் அருகே வெவ்வேறு விபத்து: கார் மோதி 2 பேர் பலி

Published On 2017-09-23 13:01 GMT   |   Update On 2017-09-23 13:01 GMT
மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மேலூர் அருகே உள்ள கள்ளம்பட்டியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 44). இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர்- அழகர்கோவில் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சர்புதீனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சர்புதீன் பரிதாபமாக இறந்தார்.

மேலூர் வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் நேற்று இரவு 10 மணியளவில் மேலூர்-மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றார்.

வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, வந்த போது அந்த வழியாக வந்த கார் முருகேசன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முருகேசன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News