செய்திகள்

கிருமாம்பாக்கம் அருகே மீனவர் தற்கொலை

Published On 2017-09-22 11:36 GMT   |   Update On 2017-09-22 11:36 GMT
கிருமாம்பாக்கம் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது55), மீனவர். இவருக்கு ஆரணி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ராஜாங்கம் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு மதியம் கரை திரும்பினார். ஆரணியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் ஆரணி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் மனைவியிடம் கோபித்து கொண்டு ராஜாங்கம் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ராஜாங்கம் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் அங்குள்ள முனீஸ்வரன் கோவில் அருகே ராஜாங்கம் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக விறகு பொறுக்க சென்றவர்கள் பார்த்து இதனை ராஜாங்கம் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News