செய்திகள்
முதுகுளத்தூர் அருகே வீடு புகுந்து திருடிய 5 பேர் கைது
முதுகுளத்தூர் அருகே வீட்டில் நகை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து, 46 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே உள்ள எஸ்.காரைக்குடியைச் சேர்ந்தவர் பத்மாவதி (வயது 72). ஊர் திரு விழாவை முன்னிட்டு நடந்த நாடகத்தை காண இவர் சென்றபோது, மர்ம கும்பல் வீட்டின் மேற் கூரையை சேதபடுத்தி வீட்டினுள் இருந்த 46 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இதுகுறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். இதில் எஸ்.காரைக்குடியை சேர்ந்த கோகுலபிரபு (23), தலைமையில், சதீஸ் (22), லோகேஷ், (17), கே.வலசையை சேர்ந்த கமல் (28), பூபாலன் ஆகிய 5 பேர் தான் வீடு புகுந்து திருடியது தெரியவந்தது.
கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி 5 பேரையும் கைது செய்து, கொள்ளையடிக்கபட்ட 46 பவுன் நகைகளை பறிமுதல் செய்தார்.