செய்திகள்

பெரியபாளையம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2017-09-13 06:52 GMT   |   Update On 2017-09-13 06:52 GMT
பெரியபாளையம் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

குமரப்பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது19). ஆரணியில் உள்ள தனியார் பள்ளி வேனில் கிளீனராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை அவர் வீட்டில் இருந்து தனது சைக்கிளில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். ஆரணி அருகே உள்ள சமுதாய கூடம் எதிரே வந்த போது அவ்வழியே வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் உடல் நசுங்கி சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சீபுரத்தை அடுத்த ஆரப்பாக்கத்தை சேர்ந்தவர் சுதாகர் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பிரவினுடன் மோட்டார் சைக்கிளில் ஓரிக்கை நோக்கி சென்றார்.

ஓரிக்கை காந்திநகர் அருகே வந்த போது உத்திரமேரூர் நோக்கி சென்ற லாரி திடீரென மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சுதாகர் சம்பவ இடத்திலேயே பலியானர். பிரவின் காயமின்றி தப்பினார்.

Tags:    

Similar News