செய்திகள்

மதுரை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2017-09-11 12:29 GMT   |   Update On 2017-09-11 12:29 GMT
2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்தி சென்றதாக வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ளது கலுங்குப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் விருமாண்டி (வயது33). இவரது மனைவி பிரமிளா (22). இவர்களுக்கு லிவிகா (4), லிசிகா (1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 8-ந்தேதி விருமாண்டி வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரமிளாவையும், குழந்தைகளையும் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயமான இளம்பெண் பிரமிளா மற்றும் 2 பெண் குழந்தைகளை அதே பகுதியைச் சேர்ந்த வனராஜன் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விருமாண்டி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News