செய்திகள்

செங்குன்றம் அருகே தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2017-09-11 07:48 GMT   |   Update On 2017-09-11 07:48 GMT
செங்குன்றம் அருகே தொழில் அதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:

செங்குன்றம் அருகேயுள்ள பாடிய நல்லூர் கல்பனா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது33) தொழில் அதிபரான இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு கார்த்திக், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை கார்த்திக்கும், அவரது மனைவியும் வீட்டுக்குச் சென்றனர். அவருடைய வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 12 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி., ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

கார்த்திக் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதை பார்த்த போது வட மாநில வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.கார்

இது குறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News