கோவையில் இளம்பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு
கோவை:
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் வித்யா (வயது 30). நேற்று இவர் தனது மொபட்டில் வள்ளுவர் நகர் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் வித்யாவின் மொபட்டை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை தாக்கினர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள வித்யாவின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த வித்யா இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
சுங்கம் சிவராம் நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (34). தனியார் நிறுவன ஊழியார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆடீஸ் வீதி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 மர்மநபர்கள் ஸ்ரீகாந்தை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பான்கார்டு, லைசென்ஸ், வெளிநாட்டு பணம், மோட்டார் சைக்கிளில் ஆகிவற்றை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் உள்பட பொருட்களை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.