செய்திகள்
சிவகாசியில் டி.வி. பார்ப்பதை கண்டித்ததால் மாணவி தற்கொலை
டி. வி. பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). இவரது மகள் முகங்கா (17) பிளஸ்-2 முடித்துள்ள இவர், கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று வந்தார். வீட்டில் இருக்கும்போது முகங்கா, அடிக்கடி டி.வி. பார்த்தாராம். இதனை தாய் கண்டித்தார். இது முகங்காவுக்கு மனவேதனை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர், விஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.