செய்திகள்
விருதுநகரில் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
விருதுநகரில் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கு பஸ்சில் புறப்பட்டார். இந்த பஸ், விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பஸ்சின் முன்புற வாசல் வழியாக செந்தில் குமார் திடீரென வெளியே குதித்தார். இதை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது.
பஸ்சில் இருந்து குதித்த செந்தில்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செந்தில் குமார் எதற்காக பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கு பஸ்சில் புறப்பட்டார். இந்த பஸ், விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பஸ்சின் முன்புற வாசல் வழியாக செந்தில் குமார் திடீரென வெளியே குதித்தார். இதை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது.
பஸ்சில் இருந்து குதித்த செந்தில்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செந்தில் குமார் எதற்காக பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.