செய்திகள்

கள்ளிக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் பலி

Published On 2017-08-19 09:24 GMT   |   Update On 2017-08-19 09:24 GMT
கள்ளிக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பி. வளையங்குளத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் சிவசக்தி (வயது 21).

இவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றுக்கு சென்ற சிவசக்தி எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிவசக்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது சகோதரர் அழகர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News