பெரியகுளம் அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி ஏ.வாடிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 41). இவருக்கும் அம்சவள்ளி (27) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சம்பவத்தன்று அம்சவள்ளி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அம்சவள்ளியின் தந்தை ராமசாமி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரிலும் திருமணம் ஆகி 6 வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்று மதுரை ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.