செய்திகள்

அண்ணாநகரில் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை

Published On 2017-08-14 09:40 GMT   |   Update On 2017-08-14 09:40 GMT
சென்னை அண்ணாநகரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:

அண்ணாநகர் ஏ.ஏ. பிளாக்கை சேர்ந்தவர் அபுல்காசன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இன்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபுல்காசன் வீட்டுக்கு சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News