செய்திகள்
கடந்த ஆண்டு 50 பேரின் உயிரை குடித்த மெரினா
சென்னை மெரினா கடற்கரையில் மூழ்கி கடந்த ஆண்டு 50 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
மெரினா கடலில் மூழ்கி கடந்த ஆண்டு 50 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், அண்ணா சதுக்கம், மெரினா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலையில் கடலில் மூழ்கிய மாணவர்கள் அவ்வையார் சிலைக்கு பின்புறம் உள்ள பகுதியில் குளித்த போதுதான் உயிரிழந்தனர். இது மெரினா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மெரினாவில் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, மெரினா கடலில் இறங்கி குளிப்பது ஆபத்தான செயலாகும். எனவே, பொதுமக்களும், இளைஞர்களும் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
மெரினா கடலில் மூழ்கி கடந்த ஆண்டு 50 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், அண்ணா சதுக்கம், மெரினா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலையில் கடலில் மூழ்கிய மாணவர்கள் அவ்வையார் சிலைக்கு பின்புறம் உள்ள பகுதியில் குளித்த போதுதான் உயிரிழந்தனர். இது மெரினா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மெரினாவில் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, மெரினா கடலில் இறங்கி குளிப்பது ஆபத்தான செயலாகும். எனவே, பொதுமக்களும், இளைஞர்களும் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.