search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marina Beach"

    • கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
    • ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது.

    சென்னை:

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 65 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் மீத முள்ளவை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.


    திருமயிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணி தொடங்கியது.

    பிளமிங்கோ என்ற சுரங்கம் தோண்டும் எந்திரமும் ஈகிள் என்ற 2-வது எந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    இந்த இரண்டு எந்திரங்க ளும் மெரினா கடற்கரை காந்திசிலை அருகே உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, திருமயிலை மெட்ரோ வரை கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கலங்கரை விளக்கத்தை வந்தடையும். வருகிற 20-ந் தேதி பிளமிங்கோ எந்திரமும், ஏப்ரல் 20-ந் தேதி ஈகிள் இரண்டாவது எந்திரமும் அதே இடத்தை அடையும்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளமிங்கோ எந்திரம் 134 மீட்டர் நீள சுரங்கப்பாதையை முடித்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவர் சிலைக்கு அருகில் உள்ளது.

    அதே நேரத்தில் ஈகிள் எந்திரம் 71 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துள்ளது. 19-ந் தேதி முக்கியமான பணிகள் தொடங்கப்படும்.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.


    திருமயிலையில் சில கடைகளை அகற்றுவதில் சிரமமாக உள்ளது. அதனால் தண்டவாளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்றார்.

    இது பற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், திருமயிலை மெட்ரோ 3 மற்றும் 4 வழித்தடங்களின் பரிமாற்றமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சில ரெயில் நிலையங்கள் 2028-ம் ஆண்டில் கடைசி இரண்டு நிலையங்களாக திறக்கப்படும்.

    ஏனென்றால் இந்த ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது. ஆனாலும் நடைபாதை 4-ல் தொடரும் கலங்கரை விளக்க மெட்ரோ, திருமயிலை மெட்ரோ இயக்கப்படுவதற்கு முன்பு திறக்கப்படும்.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் தயாரானாலும் போரூர், பூந்தமல்லி வரை வசிக்கும் மக்கள் எளிதாக மெட்ரோ ரெயிலில் மெரினா கடற்கரையை அடையலாம் என்றார்.

    • சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தியது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    * உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

    * முதல்வருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    * விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தார்.

    • பஞ்சு மிட்டாய் விற்றவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
    • ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமின் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என்பதும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

    பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சதாசிவம், செல்வம், அழகுபாண்டி, கண்ணன் உள்ளடங்கிய அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

    இதன் மாதிரிகள் கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் வாங்கிய பஞ்சு மிட்டாய்களை உடனடியாக விற்பனையாளரிடமே கொடுத்து காசு வாங்கி சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இந்த ஆய்வு மெரினாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:-

    புதுச்சேரி விவகாரத்தை தொடர்ந்து மெரினாவில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இதில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி என்ற உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பது தெரியவந்தால், அதை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை சப்ளை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் வெளிவரும்.

    இந்த ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயமும் இருக்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இயற்கைக்கு மாறான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
    • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

    மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

    பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

    இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

    இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

    காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

    பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

    போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.
    • மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    மிச்சாங் புயல் உருவானதை அடுத்து நாளை தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடக்கிறது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.

    இதனால், மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    • இசை நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றார்.

    சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

    அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம். நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறை சார்பில் பொது வெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மோகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 'மெரினா கடற்கரையில் திட்டமிடப்பட்டு உள்ள பேனா நினைவு சின்னத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் இந்த திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக உள்ளது.

    பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா நினைவு சின்ன திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. எனவே பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிட வேண்டும்' என கோரப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனுவுக்கு உதவிடும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பொதுநல மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் தவே வாதிட முற்பட்டபோது, நீதிபதி எஸ்.கே.கவுல், 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு என்ன செய்ய முடியும்?, என்ன அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது?, மீனுக்கு எப்படி இது பொருந்தும்? தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்லுங்கள் அல்லது சென்னை ஐகோர்ட்டை நாடுங்கள். ஏன் அனைத்து விவகாரங்களையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் சில காலம் இருந்துள்ளேன்.

    அரசியல் போராட்டத்தில் கோர்ட்டை தலையீடு செய்ய வைத்ததில்லை. அரசியல் போராட்டத்தை வேறு எங்காவது நடத்துங்கள். இந்த விவகாரம் சுற்றுச்சூழல் சார்ந்ததா? அப்படி என்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுங்கள்' என குறிப்பிட்டார்.

    பின்னர் வக்கீல் சித்தார்த் தவே, 'அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளதால், சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம்' என வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், 'ரிட் மனு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டை அதற்கான பணியை மட்டும் செய்ய விடுங்கள். இது போன்ற மனுக்களால் முடியாத நிலை உருவாகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்வதற்கு எது தடையாக உள்ளது?

    மாநிலத்துக்குள்ளான பிரச்சினையை மாநிலத்தில் உள்ள ஐகோர்ட்டு முதலில் விசாரிக்க வேண்டும்' என குறிப்பிட்டனர்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், 'பேனா நினைவு சின்ன திட்டம் குறித்து நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் மனுதாரர் பங்கேற்கவில்லை. ரிட் மனுவை ஜனவரி மாதம் தாக்கல் செய்துவிட்டு ஜூலை மாதம்தான் தமிழ்நாடு அரசுக்கு அளித்தார். இது போன்றுதான் மனுதாரர் இந்த வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்த வழக்கு முழுவதும் அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 6 அடி நிலம் தர மறுத்த நபர்தான் பேனா நினைவு சின்னம் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்' என வாதிட்டார்.

    மற்றொரு மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 'நினைவிடம் அமைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையிலேயே அது தடை செய்யப்பட்ட பகுதி இல்லை என கூறி பேனா நினைவு சின்னத்தை எழுப்ப திட்டமிட்டு உள்ளனர். இதில் எவ்வித பொதுநலனும் அடங்கவில்லை' என வாதிட்டார்.

    சென்னை ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தீர்களா? என நீதிபதி எஸ்.கே.கவுல் கேட்டார்.

    இதைத்தொடர்ந்து மனுவை திரும்ப பெற அனுமதி பெற்று அனுமதித்து தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    • பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
    • தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை பல்வேறு நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது மறைவையடுத்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, நினைவிடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.

    இந்நிலையில், கருணாநிதி நினைவிடம் பின்புறம் நடுக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவெடுத்தது.

    42மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரையிலும், 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்படுகிறது.

    குறிப்பாக பேனாவின் பீடம் 2263.08 சதுர மீட்டர், கடலுக்கு மேல் நடைபாதையானது 2073.01 சதுரமீட்டர், கடற்கரை- நிலம் இடையில் பாலம் 1856 சதுர மீட்டர், கடற்கரையில் நடைபாதை 1610.60 சதுர மீட்டர், நினைவிடம் முதல் பாலம் வரை 748.44 சதுர மீட்டர் பாதை என மொத்தம் 8551.13 சதுர மீட்டரில் இந்த நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    மேலும், கடற்கரையில் இருந்து நினைவுச் சின்னத்துக்கு செல்ல கடற்பரப்பில் இருந்து 6 மீட்டருக்கு மேல் அமைக்கப்படும் 650 மீட்டர் நீள பாலமானது 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது

    இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    கடந்தாண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்க அறிவுறுத்தியது. தொடர்ந்து, கருத்து கேட்பு நடத்தப்பட்டு, அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அனுப்பியது.

    அறிக்கையை ஆய்வு செய்த கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம், வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கி இருந்தது.

    பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது.

    இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 7-ந்தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அங்கேயே சிறிய அளவில் பேனா நினைவு சின்னம் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பதில் கருணாநிதியின் நினைவிடத்தில் பேனா நினைவுச்சின்னம் சிறிதாக அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது.
    • ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 13 சதவீதம் மட்டுமே உள்ளது. எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம்.

    நீர் ஆதாரங்கள் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. விதையில் விஷம் தடவுவதால் தாய்ப்பால் நஞ்சாக மாறி வருகிறது. வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது தமிழர்களின் பண்பாடு அதனை அரசு வேலையாக செயல்படுத்துவோம்.

    கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது. கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை ஏற்க முடியாது. தற்போது பேனா நினைவு சின்னம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறினால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றார்.

    முன்னதாக ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    பூமிக்கு எந்த உயிரினங்களாலும் ஆபத்து இல்லை. மனிதர்களால்தான் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற நுண்ணுயிரியிடம் இந்த உலகம் தோற்றுப்போனது. ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரங்களை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை விதிப்போம். மக்களின் தேவைக்காக மட்டுமே மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சொந்த தேவைகளுக்காக அள்ளி வருகின்றனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஷி, கிரைண்டர் கொடுக்க மாட்டோம். நல்ல குடிநீர், காற்று, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடக்கச் செய்து பூமித்தாயை 10 ஆண்டுகளில் பச்சைப் போர்வையால் போற்றுவோம் என்றார்.

    • நினைவுச் சின்னத்தை 3 பகுதிகளாக கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.
    • பேனா நினைவுச் சின்னம் 30மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல்மேல் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    மேலும் இந்த நினைவுச் சின்னத்தை 3 பகுதிகளாக கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

    முதலில் கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கப்படுகிறது. இதில் கடல் மீது 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக அமைக்கப்படும்.

    அடுத்து பேனா நினைவுச் சின்னம் 30மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இந்த நினைவுச் சின்னம் அமைக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல அமைப்புகள் ஆதரவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு அனுமதியும் இப்போது கிடைத்துவிட்டது. இருப்பினும் 15 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

    கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக்கூடாது. திட்டத்தைச் செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லாச் சான்று பெற வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. ஏதேனும் தவறான போலியான தகவல் இருப்பது தெரியவந்தால், அனுமதி வாபஸ் பெறப்படும். இந்த அனுமதியானது தேசிய பசுமை தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

    பேனா நினைவுச் சின்னத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் இனி அடுத்த கட்டமாக கட்டிட பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடும் பணியில் பொதுப் பணித்துறை ஈடுபட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். நினைவுச் சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோ சிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×