செய்திகள்
களக்காடு அருகே தீயில் கருகிய இளம்பெண் பலி
களக்காடு அருகே சமைத்துக் கொண்டிருந்த இளம்பெண் மீது எதிர்பாராத விதமாக தீ பிடித்ததில் அவர் பரிதாபமாக இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்தவர் இசக்கிதாஸ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது21). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முத்துலட்சுமி வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் தலைமையிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்தவர் இசக்கிதாஸ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது21). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முத்துலட்சுமி வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் தலைமையிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.