செய்திகள்

சென்னையில் கார் திருடிய வாலிபர் கைது: திருமங்கலத்தில் பிடிபட்டார்

Published On 2017-08-11 15:06 GMT   |   Update On 2017-08-11 15:06 GMT
சென்னையில் கார் திருடிய வாலிபரை திருமங்கலம் டோல்கேட் பகுதியில் போலீசார் கைது செய்து அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

பேரையூர்:

சென்னை ராஜமங்கலம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ரூ. 6¾ லட்சம் மதிப்புள்ள கார் திருட்டு போனது. இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் திருடிய நபரை தேடி வந்தனர்.

மேலும் கார் திருட்டு போனது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் டோல்கேட் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையில் திருட்டு போனதாக கூறப்பட்ட கார் வந்தது. உடனே காரை மறித்து உள்ளே இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சென்னை ராஜமங்கலம் பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராதாகிருஷ்ணன் அந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். ரமேஷ் ராஜமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

Similar News