செய்திகள்

காயல்பட்டினத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பக்கத்து வீட்டுக்காரர் கைது

Published On 2017-08-02 10:56 GMT   |   Update On 2017-08-02 10:56 GMT
காயல்பட்டினத்தில் கணவனை இழந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கொம்புத்துறையை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவரது மனைவி மேரி கீதா (வயது41). சத்துணவுக் கூட உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜான் போஸ்கோ இறந்துவிட்டார். இதனால் மேரி கீதா குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மரிய ஸ்டீபன் மகன் பவுல்ரோஸ் (44). மீன் பிடிக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு மேரி கீதாவிடம் ஆபாசமாகப் பேசி தகராறு செய்து கொலை மிரட்டலும் விடுத்தார்.

இது குறித்து மேரி கீதா அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து பவுல்ரோஸை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Tags:    

Similar News