செய்திகள்

நெல்லை அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவி கற்பழிப்பு

Published On 2017-07-29 11:56 GMT   |   Update On 2017-07-29 11:56 GMT
நெல்லை அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கற்பழித்த பாலிடெக்னிக் மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள களக்குடியை சேர்ந்தவர் சமுத்திர பாண்டி. இவரது மகன் மாரிமுத்து(வயது20). இவர் நெல்லை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாணவி லைலா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).

இவர் நெல்லை அருகே உள்ள கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். அப்போது லைலாவுக்கும், மாரிமுத்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று லைலா வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த மாரிமுத்து லைலாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்துவிட்டார்.

இதையடுத்து லைலா மாரிமுத்துவிடம் திருமணம் செய்யுமாறு வலியுறுத்தினார். அதற்கு மாரிமுத்து மறுத்தாராம்.

இதுபற்றி மானூர் போலீசில் லைலா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News