செய்திகள்

சங்கரன்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை: 2 பேர் கைது

Published On 2017-07-26 08:30 GMT   |   Update On 2017-07-26 08:31 GMT
சங்கரன்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மினி பஸ் கண்டக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (வயது17), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பாளை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து, நெல்லையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு மினி பஸ்சில் சென்று வந்தார்.

அப்போது மினி பஸ் கண்டக்டரான சங்கரன் கோவில் மலையடிப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (23) என்ற வாலிபர் மாணவி ரம்யாவிடம் அடிக்கடி பேசியுள்ளார். மாணவியும் யதார்த்தமாக பேசி உள்ளார்.

இந்த நிலையில் சீனிவாசன், மாணவி படிக்கும் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி சாதாரண உடையில் நின்று, மாணவி ரம்யாவுக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். நேற்று சீனிவாசனும், தருவையை சேர்ந்த அவரது நண்பர் அருணாசலமும் சென்று காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் மாணவி ரம்யா, பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பஸ் கண்டக்டர் சீனிவாசனையும், அவரது நண்பர் அருணாசலம் (22) என்பவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News