செய்திகள்

விருதுநகர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2017-07-25 10:09 GMT   |   Update On 2017-07-25 10:09 GMT
விருதுநகர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரத்தில் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் மதுரை வந்தது. பின்னர் இங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

விருதுநகரை அடுத்த துலுக்கப்பட்டி சென்ற போது சிக்னல் கிடைக்காததால் அங்கு ரெயில் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ரெயிலில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறங்கினார்.

அவர், அடுத்த தண்டவாளத்தை கடந்தபோது அதில் வந்த கன்னியாகுமாரி- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஜீன்ஸ் பேண்டும், அரக்கு கலர் சட்டை அணிந்துள்ள அந்த வாலிபர் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பலியான வாலிபரின் சட்டையில் மதுரை- விருதுநகர் இடையேயான பயணச் சீட்டு இருந்தது.

இதனால் அவர் விருதுநகரை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், விருதுநகரில் இறங்க மறந்த அவர் துலுக்கப்பட்டியில் ரெயில் நிற்பதை பார்த்து அங்கு இறங்கி தண்டவாளத்தை கடந்தபோது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

Tags:    

Similar News