செய்திகள்

துரைப்பாக்கத்தில் பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி

Published On 2017-07-24 09:24 GMT   |   Update On 2017-07-24 09:24 GMT
துரைப்பாக்கத்தில் பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தாத்தோ. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணிபுரிகிறார். இவரது மகன் ராஜு (2½ வயது).

இவர்களது வீட்டின் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி இருந்தனர். நேற்று இரவு விளையாடியபோது சிறுவன் ராஜு பள்ளத்தில் தவறி விழுந்தான். இதனால் தலையில் அடிபட்ட அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் துரைப்பாக்கத்தில் உள்ள மெட்ரோ குடிநீர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளத்தை மூடும்படி பலமுறை கூறியும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களும், அதிகாரிகளும் மூடவில்லை. அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். சிறுவன் மரணம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

Similar News