செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மது விற்றவர் கைது

Published On 2017-07-20 13:40 GMT   |   Update On 2017-07-20 13:40 GMT
சங்கரன்கோவில் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றவரை கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வின் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குவளைக்கண்ணியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகில் சென்றபோது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சிம்சன் (வயது40) என்பதும் அவரிடம் 8 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News