செய்திகள்

உடல் நலம் தேறியதால் சட்டசபைக்கு வந்த சபாநாயகர் தனபால்

Published On 2017-07-06 07:11 GMT   |   Update On 2017-07-06 07:11 GMT
உடல் நலம் தேறியதால் சபாநாயகர் தனபால் இன்று சட்டசபைக்கு வந்தார். அவர் சபையை வழி நடத்தினார்.
சென்னை:

சபாநாயகர் தனபால் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில்கடந்த 2 நாட்கள் சிகிச்சை பெற்றார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இதனால் சட்டசபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 2 நாட்கள் நடத்தினார்.

உடல் நலம் தேறிய சபாநாயகர் தனபால் இன்று சட்டசபைக்கு வந்தார். அவர் சபையை வழி நடத்தினார்.

அப்போது அவர் ‘நான் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு அவையில் இருந்தவர்கள் எனது உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

முதல் -அமைச்சர், அமைச்சர்கள் நேரில் வந்து விசாரித்தனர். அவர்களுக்கும் இந்த அவையில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்’ என்றார்.
Tags:    

Similar News