செய்திகள்

திருமங்கலத்தில் ராணுவ வீரர்-தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை

Published On 2017-06-29 10:08 GMT   |   Update On 2017-06-29 10:08 GMT
திருமங்கலத்தில் ராணுவ வீரர்- தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பேரையூர்:

திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் இளவரசு. இவர் ஓசூரில் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இதனால் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வீட்டிற்கு அவ்வப் போது வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இந்த வீட்டின் கதவு நேற்று திறந்து கிடந்தது. இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் அருகே வசிக்கும் இளவரசுவின் தாயார் ஈஸ்வரிக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டி.வி. திருட்டு போயிருந்தது.

இது குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இளவரசு குடும்பத்தினர் வந்த பிறகு தான் கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரியவரும்.

திருமங்கலம் கற்பகம் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (45), ராணுவ வீரர். இவரது மனைவி கலைச்செல்வி (40). இவர் வீட்டை பூட்டிவிட்டு எஸ். கோபாலபுரத்தில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார். இரவு அங்கு தங்கிவிட்டு காலையில் வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 9 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக கலைச்செல்வி புகார் தெரிவித்தார்.

Tags:    

Similar News