என் மலர்
நீங்கள் தேடியது "Private Company Manager"
- தனியார் நிறுவன மேலாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
- உச்சிப்புளி போலீ சார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள முருகானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மகன் மகேந்தி ரன். இவர் சென்னையில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி யில் உதவி மேலா ளராக பணியாற்றி வந்தார்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகநே்தி ரன் சொந்த ஊர் திரும்பி னார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதாகி இருந்தது.
இதையடுத்து மகேந்திரன் சம்பவத்தன்று கிணற்றில் இறங்கி பழுதான மின் மோட்டாரை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ராமநாத புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி பாகம் பிரியாள் கொடுத்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீ சார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை:
கோவை துடியலூர் அடுத்த டி.வி.எஸ் நகர் ரோடு, ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(40). தனியார் நிறுவன மேலாளர். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் உள்ள தியான மையத்திற்கு சென்றார்.
பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த டி.வி மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்டீபன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தியான மையத்திற்கு சென்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.
- கோவிந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- பெயர் பலகை கான்கிரீட் திட்டின் மீது கார் மோதியது.
காங்கயம்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பெரும்மாயூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 42). இவர் குண்டடம் அருகே உள்ள காடைபண்ணையில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவுக்கு செல்ல முடிவு செய் தார். அதன்படி கோவிந்தராஜ், அவருடைய மனைவி கோமதி (38), மகன் நிரஞ்சன் (10) ஆகியோருடன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து காரில் கொடுவாய் புறப்பட்டனர். இவர்களுடைய கார் தாரா புரம் - திருப்பூர் சாலை கொடுவாய், வெங்கடாஜலபதி தோட்டம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட் டுள்ள பெயர் பலகை கான்கிரீட் திட்டின் மீது கார் மோதியது.
இந்த விபத்தில் கோவிந்தராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோவிந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காயம் அடைந்த கோமதி மற்றும் நிரஞ்சன் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.