செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்

Published On 2017-06-26 14:36 GMT   |   Update On 2017-06-26 14:36 GMT
தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அர சியல் விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அர சியல் விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய உறுப்பினர் காமராஜ் தலைமை தாங்கினார்.  திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், இந்துராஜ், ஒன்றிய செயலாளர் முரு கேசன், ஒன்றிய உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர்.

முன்னதாக கட்சி நிதியாக ரூ 25 ஆயிரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள் சேகர், வீரவிஜயன், சந்திரமோகன், ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் பழனிசாமி நன்றி  கூறினார். 
Tags:    

Similar News