செய்திகள்

சேதராப்பட்டில் தொழிற்சாலைக்கு செல்லும் பெண்களிடம் ஈவ்-டீசிங்: வாலிபர் கைது

Published On 2017-06-04 11:46 GMT   |   Update On 2017-06-04 11:46 GMT
சேதராப்பட்டு மயிலம் சாலை சந்திப்பில் நின்று கொண்டு அங்கு வேலைக்கு செல்லும் பெண்களிடம் ஈவ்-டீசிங் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயபாரதி (வயது 21). இவர், சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் சேதராப்பட்டு மயிலம் சாலை சந்திப்பில் நின்று கொண்டு அங்கு வேலைக்கு செல்லும் மற்றும் வேலைக்கு சென்று திரும்பி வரும் பெண்களை வழிமறித்து அவர்களை கேலி - கிண்டல் செய்து கொண்டு இருந்தார்.

இதை அங்கிருந்த பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து விஜய பாரதியை பொதுமக்கள் பிடித்து சேதராப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அவரிடம் விசாரித்தார்.

குடிபோதையில் அவர் பெண்களிடம் ஈவ்-டீசிங் செய்தது தெரியவந்தது. அவர் மீது ஈவ்-டீசிங் வழக்குபதிவு செய்து கைது செய்தார்.

Tags:    

Similar News