செய்திகள்

புதுவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலி

Published On 2017-05-27 12:11 GMT   |   Update On 2017-05-27 12:11 GMT
புதுவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை அருகே கூனிமேடு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆரவள்ளி, சுகந்தி. இவர்கள் புதுவைக்கு சென்று மொத்தமாக மீன்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தனர்.

அதுபோல் இன்று அதிகாலை 4 மணிக்கு அவர்கள் மீன்கள் வாங்க புதுவைக்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலை ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் ஆரவள்ளியும், சுகந்தியும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனக செட்டிகுளம் பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News