செய்திகள்

ஆற்காடு அருகே விவசாயி தற்கொலை

Published On 2017-05-22 10:38 GMT   |   Update On 2017-05-22 10:38 GMT
ஆற்காட்டில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காட:

ஆற்காடு அருகே உள்ள கீராம்பாடி படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 57). விவசாயி. இவரது மனைவி ஜெயா (50).

வீரபத்திரன், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வீரபத்திரன், வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது இறந்தார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News