செய்திகள்

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பெண் பலி

Published On 2017-05-18 14:08 GMT   |   Update On 2017-05-18 14:08 GMT
நொய்யல் அருகே தண்ணீர் தொட்டியில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நிலை தடுமாறி தொட்டிக்குள் விழுந்ததில் பெண் பலியானார்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே கொங்கு நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது50). இவரது மனைவி சம்பூரணம்(47). இவர் வீட்டு வாசலில் உள்ள தண்ணீர் தொட்டியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சம்பூரணத்தை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணு கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News