செய்திகள்
செல்லூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்ததால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
மதுரை:
செல்லூர் கண்மாய் கரையைச் சேர்ந்தவர் சந்தான பாண்டியன் (வயது48). கட்டிட தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவும் சந்தான பாண்டியன் மது அருந்தி வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்று விட்டார்.
அதன்பிறகு போதை தெளிந்ததும் மனைவியை சந்தான பாண்டியன் தேடினார். ஆனால் அவரை பற்றி தகவல் கிடைக்காததால் மனவேதனை அடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.