search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sellur"

    குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்றதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    மதுரை:

    செல்லூர் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் விஜயகுமார் மது குடித்து வர, கார்த்திகா குழந்தைகளுடன் அறையில் சென்று படுத்து விட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் அவரது தலையில் கல்லைப்போட்டு தாக்கி விட்டு விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார்.

    பலத்த காயம் அடைந்த கார்த்திகா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் அருகே வீட்டு தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    செல்லூர் கொன்னவாயன் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 39). இவர்களுக்கு சொந்தமான வீட்டை சாகுல்ஹமீது (40), அவரது தம்பி சுல்தான் ஆகியோர் ஒத்திக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.

    அதற்கான தவணை காலம் முடிந்ததும் வீட்டை காலி செய்வது தொடர்பாக அவர்களுக்கும், ராஜலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த விரோதத்தில் சாகுல்ஹமீது மற்றும் சுல்தான் அரிவாளால் வெட்டியதில் ராஜலட்சுமி காயம் அடைந்தார்.

    இது குறித்து செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்ஹமீது, சுல்தானை கைது செய்தனர்.#tamilnews
    ×