செய்திகள்

மதுரையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

Published On 2017-04-28 11:30 GMT   |   Update On 2017-04-28 11:30 GMT
மதுரையில் போலீஸ் என்று கூறி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 வாலிர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:

ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (42), ஆட்டோ டிரைவர். இவர் சோலையழகுபுரம் பகுதியில் ஆட்டோவில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் இளங்கோவை வழிமறித்து, நாங்கள் போலீஸ், ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்தனர். அதற்கு இளங்கோவன் ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு 3 பேரும் இளங்கோவிடம் பணம் கேட்டுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர், 3 பேரிடமும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி இளங்கோ வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்து 200-ஐ பறித்துக் கொண்டு தப்பினர்.

இது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் தொடர்புடைய திருப்புவனம் செல்வகணேஷ் (27), ராஜசேகர் (28), மேலூர் நாகூர்கனி (27) ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News