செய்திகள்

கடம்பத்தூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது வழக்கு

Published On 2017-04-17 09:24 GMT   |   Update On 2017-04-17 09:24 GMT
கடம்பத்தூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய நடத்திய பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர்:

கடம்பத்தூரில் மதுக்கடையை மூடக்கோரி நேற்று மதியம் கடம்பத்தூர், பிரியாங்குப்பம், ஸ்ரீதேவி குப்பம், வெண்மணம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கடைமுன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மதுக்கடை முன்பு பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து மதுக்கடையை ஊழியர்கள் தற்காலிகமாக மூடிச்சென்றனர்.

இந்த நிலையில் மதுக்கடை மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கீர்த்தி, மஞ்சுளா, ராதிகா உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News