உள்ளூர் செய்திகள்

தென்காசியில் மெக்கானிக் உள்பட 2 பேர் திடீர் சாவு

Published On 2022-10-06 07:45 GMT   |   Update On 2022-10-06 07:45 GMT
  • தென்காசியை அடுத்த இலத்தூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்தவர் சங்கரநாராயணன் ஒர்க்‌ஷாப் உரிமையாளர்.
  • நேற்று கடைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

நெல்லை:

தென்காசியை அடுத்த இலத்தூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 36). இவரது மனைவி தங்கம்மாள்.

ஒர்க்‌ஷாப் உரிமையாளர்

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சங்கரநாராயணன் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரத்தில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று கடைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட அவர் மீண்டும் கடைக்கு புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி அதிகரித்ததால் அவரை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மில் காவலாளி

தென்காசியை அடுத்த காசிமேஜர்புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 56). இவர் புளியரையை அடுத்த கட்டளை குடியிருப்பு பகுதியில் உள்ள மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று அதிகாலை மில்லில் தூங்கி கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை சக தொழிலாளி ஆட்டோவில் அழைத்து சென்று செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News