search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கானிக்"

    • சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் அருகே உள்ள சிறுதலை காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 30).

    இவர் வேதாரண்யத்தில் உள்ள தனியார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சம்பவதன்று கடையில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சிறுதலை காடுக்கு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆதனூர் மானங்கொண்டனாரு பாலம் தூண்டிக்காரன் கோவில் அருகே சென்றபோது இவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் வேதாரண்யம் போலீஸ் சரக டி.எஸ்.பி. சுபாஷ் சந்திர போஸ் ஏற்பாட்டில் தனிப்படை போலீசாரம், வேதாரணிய போலீசாரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது
    • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்

    குளச்சல் :

    நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் சகாய சுரேஷ் (வயது 35).

    இவர் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகம் அருகில் உள்ள ஒரு மரைன் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.பிணமாக மிதந்தார்திருமண மாகாத சகாய சுரேஷ், சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது. இதனை பார்த்த துறைமுக காவலர் சந்திரன், குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகாய சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் சகாய சுரேசுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், விசைப்படகுகளில் வேலைக்கு சென்ற நேரத்தில் வலிப்பு வந்து தவறி கடலில் விழுந்ததில் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வேலாயுதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை திடீரென செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்பத்தகறாறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி-கோவை ரோட்டில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தார்.
    • அபிலாஷை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி பல்லடம் ரோடு வெங்கிட்டு வீதியை சேர்ந்தவர் அஸ்வத் (வயது23).

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த மாதம் 17-ந் தேதி அஸ்வத் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் விளையாடுவதற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டபோது, அவரது நண்பர் தனது மோட்டார் சைக்கிளை அஸ்வத்திடம் கொடுத்து, நீ எடுத்து சென்று விட்டு நாளை கொண்டு வா என கொடுத்து அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து அஸ்வத் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். அதனை வீட்டில் உள்ள போர்டிகோவில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.

    ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று பொள்ளாச்சி கிழக்கு நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பொள்ளாச்சி-கோவை ரோட்டில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர் கோவையை சேர்ந்த அபிலாஷ்(28) என்பதும், மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    மேலும் இவர் தான் அஸ்வத்தின் வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும், பின்னர் அதனை கோவையில் உள்ள ஒருவரிடம் விற்று விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அபிலாசை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த என்ஜினீயரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 32 வயது சிவில் என்ஜினீயர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக்கின் வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொண்டார்.

    அப்போது என்ஜினீயருக்கு மெக்கானிக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் மெக்கானிக்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றார். இது மெக்கானிக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று என்ஜினீயர் புளியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மெக்கானிக் தனது நண்பருடன் சேர்ந்து என்ஜினீயரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த என்ஜினீயரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு என்ஜினீயருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமயநல்லூர் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது47). கார் பழுதுபார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இரவில் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவு பூட்டும், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லாக்கரில் 4¼பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    திருவாரூர் மாவட்டம் கோவில்பத்து என்ற பகுதியை சேர்ந்த பரணி (வயது 20) என்பவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி ஓயி எந்திரம் மெக்கா னிக்காக வேலை செய்து வந்தார். நேற்று இரவு கோவை -திருச்சி ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள சொரியங்கிண த்துப்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது பரமத்தி யிலிருந்து திருப்பூரை நோக்கி வந்த டிப்பர் லாரி பரணி மீது மோதியது, இதனால் பலத்த அடிபட்ட பரணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    இந்த விபத்து குறித்து வெள்ள கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெ க்டர் கே. ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார்

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்துள்ள பூமாண்டம் வலசு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாமோதரன் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தாமோதரன் தினமும் குடித்து வந்ததால் வயிறு, தொண்டை ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குண மடைந்தார்.

    இதனையடுத்து சம்பவத்தன்று திடீரென்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாமோதரன் இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஏ.டி.எம். மெக்கானிக் பலியானார்.
    • முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை விளாங்குடியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முத்துக்குமார் (வயது 36). இவர் ஏ.டி.எம். மெக்கானிக்காக பணிபுரிந்தார்.

    நேற்று மாலை இவர் அருப்புக்கோட்டையில் வேலையை முடித்துவிட்டு மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவனியாபுரம் அருகே உள்ள பெருங்குடி அருகே வந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனம் எந்தவித சைகையும் செய்யாமல் திடீரென்று திரும்பியது.

    இதனால் முத்துக்குமார் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது 27). இவர் விசைத்தறி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் இன்று காலை சிவதாபுரம் அருகே உள்ள பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எலி மருந்து சாப்பிட்ட மெக்கானிக் பாலியானர்.
    • இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). ஜேசிபி மெக்கானிக்கான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட குமார், மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×