உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்திய 2 ரவுடிகள் கைது
- போலீசார் சித்தையன்கோட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சித்தையன்கோட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த ரமணா(20), நரசிங்கபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(26) என தெரியவந்தது. அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ரமணா ஏற்கனவே கஞ்சா வழக்கில் பிடிபட்டு சிறைக்கு சென்று வந்தவர். பாலமுருகன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் செம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.