உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-03 08:40 GMT   |   Update On 2022-10-03 08:40 GMT
  • ராஜன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
  • 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம்:

திண்டிவனம் போலீசார்,மரக்காணம் சாலையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜன், என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

அவரிடம் இருந்த 20,000 மதிப்பிலான குட்கா ஹான்ஸ் பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாசன் இன்று இரவு மரக்காணம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். புதுவைநோக்கி வந்த (omni)காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பொருளை கடத்தி வந்த கோவடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News