செய்திகள்
எல்.முருகன்

தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்

Published On 2021-03-04 15:33 GMT   |   Update On 2021-03-04 15:33 GMT
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்திற்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்தியதன் மூலம் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக எல்.முருகன் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தலைவர்களின் பிரசாரமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், ‘கன்னியாகுமரியில் மார்ச் 1ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்தியதன் மூலம் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். இதற்காக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என்று எல்.முருகன் கூறி உள்ளார்.
Tags:    

Similar News