சமையல்

இட்லிக்கு சூப்பரான தேங்காய் புளி சட்னி

Published On 2023-07-03 05:53 GMT   |   Update On 2023-07-03 05:53 GMT
  • இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
  • இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்

உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 2

புளி - 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

* தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

* இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News