என் மலர்
நீங்கள் தேடியது "Recipes"
- சோயாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சோயா லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீல்மேக்கர் - கால் கப்
உருளைக்கிழங்கு - 1
ப.பட்டாணி - ஒரு கைப்பிடி
பெ.வெங்காயம் - 1
கேரட் - 1
குடை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
ஐஸ் குச்சிகள் - 5
செய்முறை :
வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட் துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் சோயாவை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் சோயாவை போட்டு கிளறி இறக்கவும்.
நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும்.
பின்னர் உருண்டைகளின் நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் ரெடி.
- குழந்தைகளுக்கு காலிபிளவர் சில்லி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
மைதா - அரை கப்
சோள மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை :
காலி பிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து காலிபிளவரை கொட்டி சிறிது நேரம் வேகவைத்து இறக்கவும்.
வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவர் பூவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது ருசியான காலிபிளவர் சில்லி ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த லட்டு மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் திடீரென வந்தால் இந்த லட்டு செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 2 தேகரண்டி
முந்திரி, திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் - 3 (பொடித்தது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
7 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
எளிய முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.
- இந்த காபி பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
- சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் இந்த காபியை அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
சுக்கு - ஒரு துண்டு,
கருப்பட்டி - தேவையான அளவு,
துளசி - கைப்பிடி.
செய்முறை :
துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.
இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
- இது வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து செய்யப்படும் ரெசிபி.
- நிலக்கடலை மிட்டாய் எல்லா குழந்தைகளும் எப்பவும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 200 கிராம்,
நெய் - 200 கிராம்,
சர்க்கரை - 300 கிராம்,
முந்திரி, பாதாம் - தேவையான அளவு,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
தேங்காய்த் துருவல் - சிறிதளவு.
செய்முறை :
வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.
சூப்பரான தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- வீட்டிலேயே சாக்லேட் பர்ஃபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1/4 கப்
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/3 கப்
தண்ணீர் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
செய்முறை :
அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .
ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்
இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும் பொழுதுமுன்பு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். பாதாம், முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும்.
இப்போது சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்
- இந்த வெங்காய பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- இன்று இந்த பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமையான வெங்காய பஜ்ஜி தயார்.
- இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
- டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வடை.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.
- உப்புமா என்றாலே சிலருக்கு முகம் சுருங்கிவிடும்.
- இட்லி உப்புமாவை செய்து கொடுங்க மிச்சமின்றி கடாய் காலியாகும்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 7
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
வேர்க்கடலை - சிறிதளவு
முந்திரி - 10
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.
உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.
- ரவையில் உப்புமா, கிச்சடி செய்து இருப்பீங்க.
- இன்று ரவையில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
கறிவேப்பிலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பௌலில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, பின் 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, வடை பதத்திற்கு கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனெனில் ரவை ஊறும் போது இன்றும் திக்கான பதத்தில் வரும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பின் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான ரவா வடை ரெடி!
- முளைகட்டிய கடலை பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
- கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமுள்ளது.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 2 ,
பெரிய தக்காளி - ஒன்று,
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5,
லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2,
பிரிஞ்சி இலை - ஒன்று,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - விருப்பத்திற்கேற்ப,
பொட்டுக் கடலை மாவு - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கடைசியில் பொட்டுக் கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாறலாம்.
- மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
- கோதுமை மாவில் இன்று வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்,
ரவை - அரை கப்,
பச்சரிசி மாவு - 3 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தயிர் - அரை கப்,
தண்ணீர் - ஒன்றரை கப்,
பச்சை மிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - ஒன்று,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
மிளகு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித்தழை,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
சமையல் சோடா - கால் டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள்.
அதனுடன் சீரகத்தை தாளித்து சேருங்கள்.
இவற்றுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.
விருப்பம் இல்லை என்றால் இவற்றை தவிர்த்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் இதற்கு மேல் அதிகம் எதுவும் சேர்க்க கூடாது. பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும்,
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுடும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள்.
அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்து டீயுடன் அல்லது சாப்பாட்டுடன் கூட வைத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.
சூப்பரான கோதுமை வடை ரெடி.