என் மலர்

    நீங்கள் தேடியது "Recipes"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
    • லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர்.

    லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும், இது சர்க்கரை, கோதுமை மாவு, நெய் மற்றும் பிற பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு ஆகும். லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர். லட்டு வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த இனிப்பு ஆகும். இது ஒரு சிறந்த ஆரோக்கியமான இனிப்பு ஆகும், இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. லட்டு செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி பழத்தினை வைத்து வித்தியாசமான முறையில் ஸ்ட்ராபெர்ரி லட்டு செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கங்களை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பூந்தி தயாரிக்க:

    கடலை மாவு -150 கிராம்

    இளஞ்சிவப்பு நிற சிரப் - 1 தேக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - 120 மில்லி

    நெய் - தேவையான அளவு

    சர்க்கரை பாகு தயாரிக்க:

    சர்க்கரை - 150 கிராம்

    ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ் அல்லது எசென்ஸ் - ஒரு மூடி

    சர்க்கரை - 100 கிராம்

    தண்ணீர் - 150 மில்லி

    பிஸ்தா, பாதாம் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு. இளஞ்சிவப்பு நிற சிரப், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ், சர்க்கரை சேர்த்து கலக்கி, கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப்பட்டால் அதில் சில துளிகள் இளஞ்சிவப்பு நிற சிரப் சேர்க்கலாம்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது தயாரித்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையை சல்லடைக் கரண்டி மூலம் அதில் ஊற்றவும். பூந்தி நன்றாக பொரித்து வந்ததும், அதை ஸ்ட்ராபெர்ரி பாகில் போடவும். இந்த பூந்திக் கலவை சூடாக இருக்கும் போதே, உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் அதில் சிறிது நெய் சேர்க்கலாம். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது 'ஸ்ட்ராபெர்ரி லட்டு தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
    • வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    * கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.

    * பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)

    * கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.

    * ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.

    * அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.

    * கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.
    • அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.

    * சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

    * மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.

    * பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.

    * அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * ரசம் கொதிக்கும்போது அதில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

    * ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.

    * சர்க்கரை இருக்கும் டப்பாவில் இரண்டு, மூன்று லவங்கத்தை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

    * எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.

    * பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.

    * தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.

    * தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

    * மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முறுக்கு - தேவையான அளவு

    வெங்காயம் - 1

    வெள்ளரிக்காய் - 1

    தக்காளி - 1

    ஓமப்பொடி - 1 கப்

    சீஸ் துருவல் - 1 கப்

    சட்னி தயாரிக்க:

    புதினா - ஒரு கைப்பிடி

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிய துண்டு

    பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    சட்னி தயாரிக்க:

    ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    சாண்ட்விச் தயாரிக்க:

    வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

    முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும்.

    பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.

    இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கறி - 500 கிராம்

    வெங்காயம் - 2

    கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை - 3

    தனியா - 1 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 6

    கருப்பு ஏலக்காய் - 2

    பச்சை ஏலக்காய் - 6

    அன்னாசி பூ - 1

    கடுக்காய் - 1 சிறியது

    கிராம்பு - 6

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 துண்டு

    ஜாதிப்பத்திரி - 3 துண்டு

    கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.

    ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.

    அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.

    வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.

    பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.

    பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்.
    • இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவு.

    தேவையான பொருட்கள்

    பார்லி தூள் - 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)

    பார்லி அரிசி - 4 டீஸ்பூன்

    பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்

    மிளகு தூள் - 3 டீஸ்பூன்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    துளசி இலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

    பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டீ, காபியுடன் சாப்பிட இந்த போண்ட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - 200 கிராம்,

    கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - 1

    தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2,

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

    இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.

    குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
    • குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    குடைமிளகாய் - ஒன்று

    முட்டை - 2

    வெங்காயம் - ஒன்று

    தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)

    ப.மிளகாய் - 1

    கேரட் துருவியது - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரும்பலானோர் வீட்டில் காலை உணவு இட்லியாக தான் இருக்கும்.
    • இன்று புதுவகையான இட்லியை செய்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 2 கப்

    சர்க்கரை- 3 தேக்கரண்டி

    உளுந்தம் பருப்பு - 3/4 கப்

    தேங்காய் பால் - 3/4 கப்

    உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    உலர் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 5 மணி நேரத்திற்கு ஊற வைத்து, அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதனுடன் அரைத்த 2 மாவையும் ஒன்றாக சேர்த்து கலந்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் உப்பு, 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.

    சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும்.

    இந்தக் கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    3 மணி நேரம் கழித்து மாவை வாழை இலைகளை கோன் போல் செய்து கொள்ளவும். செய்த கோனை டம்ளர்களில் வைக்கவும். அப்போது மாவு கீழே ஊற்றாது. அந்த கோனில் மாவை ஊற்றி வழக்கம் போல இட்லி சட்டியில் வைத்து மூடி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

    வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் கோன் இட்லி ரெடி.

    இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலா