search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chutney"

    • சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது.
    • முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதி.

    டெல்லியில் உள்ள ஷஹ்தரா விஸ்வாஸ் நகர் பகுதியில் மோமோவுக்கு கூடுதலாக சட்னி கேட்ட சந்தீப் என்பவரை கடையின் உரிமையாளர் விகாஸ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், அங்கு இருவருக்குள்ளும் ரகளை ஏற்பட்டுள்ளது. இதில், கடையின் உரிமையாளர் சந்தீபை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சந்தீப் மீது தாக்குதல் நடத்திய விகாஸ் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். இந்நிலையில், விகாஸை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

    • மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
    • இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வல்லாரைக்கீரை - ஒரு கப்,

    பூண்டு - 2 பல்,

    தேங்காய் துருவல் - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 5,

    எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.

    குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புளிச்சக்கீரயில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது.
    • இந்த கீரை சாப்பிட்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

    தேவையான பொருட்கள்

    புளிச்சக்கீரை - 2 கப்,

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,

    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு,

    வேர்க்கடலைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

    சர்க்கரை மற்றும் பெருங்காயம் - 1 சிட்டிகை,

    கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்.

    செய்முறை

    புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுத் தாளிக்க வேண்டும்.

    அதில் தனியா மற்றும் மிளகாய் தூளைச் சேர்க்கவும்.

    அதன்பின் அதோடு புளிச்சக்கீரையைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயம், சீனி, உப்பு சுவைக்கேற்ப சேர்க்க வேண்டும்.

    புளிச்சக்கீரை நன்றாக வதக்கியதும் ஆறிய வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கோங்குரா சட்னி ரெடியாகிவிடும்.

    இந்தச் சட்னியை இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இஞ்சி வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.
    • இஞ்சி துவையல் சாப்பிட மலச்சிக்கல், மார்பு வலி தீரும்.

    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 250 கிராம்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 7

    காய்ந்த மிளகாய் - 6

    புளி - 2 துண்டு

    வெல்லம் - 1 துண்டு

    துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

    கொத்தமல்லி இலை - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 1

    பெருங்காய தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    * இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

    * இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.

    * ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    * தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.

    * இப்போது சுவையான இஞ்சி சட்னி தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 1 கப்

    உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 2

    புளி - 2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    * பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

    * தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

    * இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
    • வேர்க்கடலையில் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 1/4 கப்

    கேரட் துருவல் - ஒரு கப்

    காய்ந்த மிளகாய் - 6

    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

    எண்ணெய் - 1 ஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    இந்த எண்ணெயில் கேரட்டை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.

    இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி சேர்த்து கலந்து எடுத்து உங்களுக்கு பிடித்த காலை உணவுடன் வைத்து பரிமாறுங்க.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது.
    • வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

    தேவையான பொருட்கள் :

    வல்லாரைக்கீரை - அரை கட்டு,

    தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,

    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

    தேங்காய் துருவல், - கால் கப்,

    பச்சை மிளகாய் - 5,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

    சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.

    குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பூண்டு - 4 பற்கள்

    காய்ந்த மிளகாய் -5

    இஞ்சி - சிறிய துண்டு

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

    புதினா - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    புளி - 1/2 தேக்கரண்டி

    துருவிய தேங்காய் - 1/4 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.

    அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கதம்ப சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,

    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,

    பச்சை மிளகாய் - 2,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
    • அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கைப்பிடி

    தேங்காய் - கால் மூடி

    சிவப்பு மிளகாய் - 7

    பூண்டு - 6 பல்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

    கொள்ளு துவையல் தயார்.

    கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    நமது உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,
    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
    பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
    இஞ்சியை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கும் நல்லது. சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - 100 கிராம்
    உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    துருவிய தேங்காய் - கால் கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    வெல்லம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.

    இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

    அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

    துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

    தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

    சுவையான இஞ்சி துவையல் ரெடி..!
    ×