ஆன்மிகம்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற் றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராகன் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார். இதையடுத்து கொடி மரத்துக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விழாவுக் கான கொடியேற்றப்பட்டது. இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அன்னம், தங்க கருட, சேஷ, ஹனுமந்த, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி தேரோட்டமும், 19-ந்தேதி மட்டையடி உற்சவம், நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரி, தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா, ஆலய தக்கார் சீனுவாசன், ராஜாமணி உள்ளிட்ட ஆலய அர்ச்சகர்கள், உபயதாரர்கள் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அன்னம், தங்க கருட, சேஷ, ஹனுமந்த, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி தேரோட்டமும், 19-ந்தேதி மட்டையடி உற்சவம், நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரி, தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா, ஆலய தக்கார் சீனுவாசன், ராஜாமணி உள்ளிட்ட ஆலய அர்ச்சகர்கள், உபயதாரர்கள் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.